About Nivetha

ஆசைகளும் கனவுகளும் எனக்கும் உண்டு
கற்பனைகளை நிஜமாக்கத்
  துடித்ததுண்டு

கவிதைகளை நான் காதலிக்கிறேன்

என் சோகங்களை அதற்குள் ஒழித்துவைக்கிறேன்


என் சோகத்திற்கும் என் கண்ணீரைப் பிடிக்கும்

அடிக்கடி வந்து பார்க்கத் துடிக்கும்


கவலைகளைக் கையாளத் தெரியும்

என் பேனாவுக்கு மட்டுமே என்னைப் புரியும்


நாளை என்பது என்னிடம் இல்லை

சாவை எண்ணி நான் பயந்ததில்லை


ஏதேனும் சாதித்திட மனம் துடிக்கிறது
,
என்னவெனத் தெரியாமல் அது தவிக்கிறது

என் வசம் இருப்பது கற்பனை ஒன்றே
,
அதுவும் இப்போது சோகத்தின் பிடியில்...
அளவாய் ஜோசித்தாலும்...  ஆழமாய்ஜோசித்தாலும்...
புலப்படுவது என்னவோ என் வாழ்வின் சோகம் மட்டுமே..

என் எதிர்பார்ப்புகள் எதுவும் 
இதுவரை நிறைவேறியதில்லை,  
என் ஆசைகளும் கூட...
 
அனைத்தையும் என் கற்பனைகளால் 
நிறைவேற்றும் முயற்சி தான் இத்தளம் 

***
அழகான தமிழில் அற்புதமாய் எழுத
நான் கவிதாயினி அல்ல,
இருந்தும் என்னை எழுதத் தூண்டியது..
தமிழ் எனும் மொழியும் - என்
மனதில் உள்ள வலியும்..!
தமிழில் உள்ள ஆர்வத்தை தடைபோடுகிறது
என் எழுத்தில் எழும் பிழைகள்,
தமிழிடம் மன்னிப்பு வேண்டி...

-நிவேதா-
***
கவிதைக்காகவே நீ என்னை நேசிக்கின்றாய்
உனக்கு.. கவிதை பிடிக்கும் என்பதற்காகவே
நான் கவிதையை நேசிக்கின்றேன்...!
***