Thursday, April 29, 2010

* இராட்ஷசக் காதல்...

 
 
இராத்திரி நேரம்
இராகங்கள் ஒலிக்க
இராட்ஷசக்  காதலால்
இராத்தூக்கம் இல்லாமல்
இரகசியக் காதலனை எண்ணி - ராதை
இங்கே தவமிருக்க - கண்ணன்
இன்னும் விழித்திருக்க - காதல் கொண்ட
இரு நெஞ்சம் மட்டும் ஒன்றோடு ஒன்றாய்
இணைந்தே கிடக்கின்றன..!

Sunday, April 25, 2010

* என் காதல்...
















என்னிடம் பேசும் போதெல்லாம்
என் காதலி பற்றியே நண்பன் கேட்பான்...

"அவள் எப்படி இருப்பாள்...?" என்றான்
"அமைதியும், அடக்கமும், அன்புமே
அவள் அழகை இன்னும் கூட்டும்" என்றேன்

"உண்மையாய் அவளைக் காதலிக்கிறாயா...?" என்றான்
"பொய்யில்லாமல் காதல் இல்லை,
ஆனால் என் காதல் பொய்யில்லை" என்றேன்

"அவளை நீ ஏமாற்றி விடமாட்டாயா..?" என்றான்
"அவள் என்னை ஏமாற்றினாலும் நான் மாட்டேன்" என்றேன்

"அவளை நானும் சந்திக்கலாமா..?" என்றான்
"நான் சந்திப்பதே மிகக்குறைவு" என்றேன்

"எப்பொழுது திருமணம்..?" என்றான்
"எப்போதோ ஆகிவிட்டது" என்றேன்

"எனக்கு நீ சொல்லவில்லையே.." கோபித்தான்
"நேற்றுத்தான் எனக்கே தெரியும்" மௌனித்தேன்

"என்னடா சொல்கிறாய்...?" பதறினான்
அவளுக்குத் திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாம்..!

ஏதோ ஒரு கவிதையின் பாதிப்பில்....
-நிவேதா-

Thursday, April 8, 2010

* இயற்கைக்கன்னி

நீ என்னை வெறுக்க வெறுக்கத்தான்
உன் மீது நான் கொண்ட காதல் அதிகமாகிறது...

உனக்கு
என் மீதுள்ள வெறுப்பை விட
எனக்கு உன்மீதுள்ள காதல்
கோடி மடங்கு அதிகம் தெரியுமா உனக்கு? 
 
இப்பொழுது உனக்கு
என் காதல் புரியாமல் போகலாம்...
 
ஆனால்
அது உனக்கு புரியும் நேரம் வரும்

அதுவரை இவ்வுலகில்
இருப்பேனோ தெரியவில்லை... 
 
இவள்
இறந்தாலும் இவள் காதல்
இவ் வுலகை விட்டுப் போகாது...!
 

உன் விழிகள் காணும்
திசை எங்கும் இந்தப் பேதை இருப்பாள்...!
 
நீ ரசிக்கும்
அந்த நிலவாய்.. முகிலாய்.. வானமாய்..
மழையாய்.. மழைச்சிலையாய்.. மின்னலாய்..
மரமாய்.. இலையாய்.. பூவாய்.. காயாய்.. கனியாய்.. அவதரிப்பேன்...

உன் இதழ்களில் தவழும்
அந்தத் தமிழாய்.. கவியாய்..
உருவெடுப்பாள் இந்த மாது...
 
தென்றலாய்
வந்து உன் தேகம் தீண்டுவேன்...

நீராய் இருந்து 
உன் மேனி நனைப்பேன்...
 
வானாய் மாறி 
உனக்குக் குடை பிடிப்பேன்...
 
பூமியாய் தோன்றி 
உன்னை நிதமும் தாங்குவேன்...
 
மெழுகாய் எரிந்து 
உனக்கு ஒளிவீசுவேன்...
 
காலை 
வணக்கம் சொல்ல சூரியனாய் வருவேன்...
 
மாலையில்
நீ கேட்கும் கீதமாய் வருவேன்...
 
இரவில் 
உன்னைத் தூங்க வைக்க விண்மீனாய் வருவேன்...
 
உன் சேயாய் பிறந்து உனக்கு தாயாய் இருந்து
உன்னுடனே வாழ்வேன் அதுவே என் ஆசை...
 
அதற்காகவேனும்
என்னவனே நீ மணம் முடிக்க வேண்டும் ஒருத்தியை...
 
என் வேண்டுகோளை ஏற்று,
இன்றே சம்மதம் சொல்....
பதிலுக்காய் கத்திருக்கிறேன்......

இப்படிக்கு..
உன் காதலி 



 

* எப்போதும் கண்ணீர்...

 
பெண்ணே உன் கண்ணென்ன கடலா..?
 
அதை நதியாய் ஏன் வழிய விடுகிறாய்..?
 
எப்போதும் கண்ணீர் இருந்தும் தீரவில்லை தண்ணீர்..!
 
கத்தி கொண்டு கீறினாலும் ஆறிடுமடி வலி - உன் கண்ணீரால் ஏற்படுதே தீராத வலி..!
 
கண்ணீர் துளிகள் பொக்கிஷமடி
அதை அழுதே தீர்த்து விடாதே...!