Friday, March 25, 2011

* ஊரே உறங்கும் நேரம்...


ஊரே உறங்கும் நேரம்
நிலா உதிக்கும் வானம்

நீண்ட  தூரப் பயணம்

தார்ச்சாலையின் மீது

வாகனம் ஓடும் போது..


அதற்குள்ளே நீயும்

உன் பக்கத்தில் நானும்

அமைதியான இசையில்

மனம் மயங்கும் நேரம்

மௌனம் காத்தோம் இருவரும்..


நீ காரோடும் அழகை

இரசிக்கும் என் விழிகள்

அடிக்கடி உன் கன்னம்

தடவிப்பார்க்கும் என் விரல்கள்..


உன் முத்தத்திற்காய்

இதழ்கள் காத்திருக்கும்போது

உன் நெருக்கத்தை வேண்டி

துடிதுடிக்கும் இதயம்..


அடிக்கடி விழிகள் நான்கும்

பார்வையால் அணைக்கும் நேரம்

காதலும் கூடிடும்

பயணமும் இனித்திடும்..


அருகருகே இருந்தாலும்

தவித்திடும் இதயம்

தவிப்பு கூட சுகமாகும்

ஒரு போர்வைக்குள் இருவரும்

இரவில் நெருங்கியிருக்கும் அந்நேரம்